முன்னாள் ஜனாதிபதியும் ஐக்கிய தேசியக் கட்சி தலைவருமான ரணில் விக்ரமசிங்க மற்றும் எதிர்க்கட்சித் தலைவரும் சமகி ஜன பலவேகய தலைவருமான சஜித் பிரேமதாச ஆகியோர் நேற்று (01) சந்தித்துள்ளனர்.
இச்சந்திப்பு, ஐ.தே.க. முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சமன் ரத்னப்ரியவின் மகனின் திருமண விழாவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
பிலியந்தலை பகுதியில் உள்ள ஓர் ஹோட்டலில் நடைபெற்ற இந்த விழாவிற்கு இருவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததுடன், அவர்கள் ஒரே மேசையில் அமர்த்தப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது.
அதன்படி, ரணிலும் சஜித்தும் சுமார் ஒரு மணி நேரத்திற்கு நெருங்கிய காலப்பகுதியில் நண்பரீதியான உரையாடலில் ஈடுபட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்த மேசையில் ராஜித சேனாரத்ன, மனோ கணேசன், வஜிர அபேவர்தன, லக்ஷ்மன் பொன்சேகா உள்ளிட்டோரும் அமர்ந்திருந்ததாகவும் கூறப்படுகிறது.



