தெற்கு அதிவேக வீதியின் வெலிபென்னவுக்கும் தொடங்கொடவுக்கும் இடையிலான பகுதியில் பஸ் ஒன்று தீ விபத்துக்குள்ளாகியுள்ளது.
காலிக்கும், மாகும்புரவிற்கும் இடையில் பயணித்த பஸ் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இயந்திரக் கோளாறு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
பொலிஸாரும், பொதுமக்களும் இணைந்து பஸ்ஸில் ஏற்பட்ட தீயை அணைப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர்.