நுவரெலியாவில் மண்ணுக்குள் புதைந்து போன ஐவர் காயங்களுடன் மீட்பு!

நுவரெலியா மாவட்டத்தில் மண்மேடு சரிந்து விழுந்ததில் 6 பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியா சாமிமலை வீதியில் உள்ள பனியன் பாலத்திற்கு அருகில் நேற்று (05) இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சரிந்த மண் மேட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த 6 தொழிலாளர்கள் மீது மற்றொரு மண் மேடு சரிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் சிக்கிய 6 பேரும் மீட்கப்பட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மஸ்கெலியாவில் மண்மேடொன்று சரிந்து விழுந்ததில் புதையுண்ட 6பேரும் காயங்களுடன் மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலையால் நேற்று மஸ்கெலியா பகுதியில் பெய்த கடும் மழையினால் வீடொன்றின் மீது பாரிய மண் திட்டு சரிந்து வீழ்ந்துள்ளது.

இன்று மதியம் 12:00 மணியளவில் அந்த மண் மேட்டை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்த ஆறு பேர் மீது மற்றொரு மண் மேடு சரிந்து விழுந்துள்ளது.

பொது மக்கள் இணைந்து மண் மேட்டின் கீழ் புதையுண்டிருந்த ஆறு பேரையும் மீட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

 

நன்றி

Leave a Reply