நியூசிலாந்தில் மணிக்கு 155 கி.மீ (96 மைல்) வேகத்தில் வீசும் பலத்த காற்று காரணமாக சுமார் 90,000 வீடுகளுக்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், அதிகாரிகள் 100க்கும் மேற்பட்ட விமான சேவைகளை இரத்து செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
வியாழக்கிழமை (23) முன்னதாக கேன்டர்பரி மற்றும் வெலிங்டன் உள்ளிட்ட மத்தியப் பகுதிகளில் நியூசிலாந்து அதிகாரிகள் அரிய சிவப்பு காற்று எச்சரிக்கைகளை வெளியிட்டனர்.
எனினும், பின்னர் அந்த எச்சரிக்கை நீக்கப்பட்டது.
மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், பயணத்தைத் தவிர்க்கவும், மேலும் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்புத் தடைகளுக்குத் தயாராகவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மின்வெட்டு பெரும்பாலும் தெற்குத் தீவில் உள்ள வீடுகளைப் பாதித்ததாகத் தெரிகிறது, இருப்பினும் மின்சாரம் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
சில இடங்களில், வீடுகளின் கூரைகள் கிழிந்து விழுந்துள்ளதாகவும், மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
வெலிங்டனில் ஒரு மரக்கிளை வீழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார்.
மக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்கவும், பயணத்தைத் தவிர்க்கவும், மேலும் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்புத் தடைகளுக்குத் தயாராகவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
மின்வெட்டு பெரும்பாலும் தெற்குத் தீவில் உள்ள வீடுகளைப் பாதித்து வருவதாகத் தெரிகிறது.
இருப்பினும் மின் விநியகேம் படிப்படியாக மீட்டெடுக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
