பல்கலைக்கழகங்களில் இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களை கேட்டுக் கொள்ளும் நடவடிக்கைகள் எதிர்வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அண்மையில் வெளியாகியிருந்த A/L பரீட்சை முடிவுகளின் அடிப்படையில், இளங்கலை பட்டப்படிப்புகளுக்கான விண்ணப்பங்களை ஏற்கும் பணிகள் வரும் 27ஆம் திகதி ஆரம்பமாகும் என அந்த ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
அதற்கான விண்ணப்பங்கள் ஒன்லைன் மூலம் ஏற்றுக்கொள்ளப்படும் என்றும், விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பிக்க 3 வார கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அந்த ஆணைக் குழு தெரிவித்துள்ளது.
அதேவேளை பல்கலைக்கழக அனுமதி தொடர்பான அறிவுறுத்தல்கள் அடங்கிய கைநூல் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என்றும் அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
Post Views: 0
