இலங்கையில் பல ஆயிரம் கோடி கணக்கான ரூபாய் பணத்தை பல வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்திருந்த ஒருவரை பொலிஸ் அதிகாரி கமல் ஆரியவன்சவின் வழிநடத்தலில் CID கைது செய்துள்ளது
வங்கிக் கணக்கில் ரூபாய் 1,000 கோடிக்கு மேற்பட்ட தொகை இருந்ததுடன், மேலும் நான்கு கணக்குகளில் தலா ரூபாய் 500 கோடி, 600 கோடி மற்றும் 800 கோடி வரையிலான பெரும் தொகைகள் வைப்பு செய்யப்பட்டிருந்தது.
இவ்வாறான அளவிலான பெரும் நிதி மோசடி சம்பவம் இலங்கையில் முதல் முறையாக வெளிச்சத்துக்கு வந்துள்ளதாகவும் பொலிஸார் கூறுகின்றனர். குறித்த நபர் தனது வங்கிக் கணக்குகளை மூன்று மாதங்களுக்கு ஒருமுறை மாற்றி, புதிய கணக்குகளைத் திறந்து வந்திருப்பதும் கண்டறியப்பட்டுள்ளது.

