யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள பிரதமர் ஹரிணி அமரசூரிய நல்லூர் முருகன் ஆலயத்தில் வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.
நல்லூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த மஹோட்சவம் நடைபெற்று வரும் நிலையில், இன்று காலை பிரதமர் வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தார்.
மிகவும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் பிரதர் ஆலத்திற்கு வருகை தந்திருந்தார்.
பிரதமருடன் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனும் ஆலயத்திற்கு வருகை தந்திருந்தார்.
மேலும், இதன் போது பொது மக்களுடனும் பிரதமர் கலந்துரையாடியிருந்தமை குறிப்பிடத்தக்கது.