76
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்காப்பு நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில், பிரித்தானிய பாதுகாப்பு அமைச்சு (Ministry of Defence) நான்கு கூடுதல் ‘டைபூன்’ (Typhoon) போர் விமானங்களை கத்தாருக்கு அனுப்பியுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
ஏற்கனவே கடந்த ஜனவரி மாதம் முதல் கத்தாரில் நிலைநிறுத்தப்பட்டுள்ள பிரித்தானிய-கத்தார் கூட்டு டைபூன் படைப்பிரிவின் (UK-Qatar Joint Typhoon Squadron) போர் விமானங்களுடன், தற்போது இந்த நான்கு புதிய விமானங்களும் இணைந்து கொள்ளும்.
பிராந்திய பாதுகாப்பை உறுதிப்படுத்துதல், பிரித்தானிய மக்களின் நலன்களைப் பாதுகாத்தல் மற்றும் நட்பு நாடுகளுக்கு ஆதரவாகச் செயல்படுதல் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
“பிரித்தானியா தனது நட்பு நாடுகளுக்கு எப்போதும் துணை நிற்கும். எமது மக்களையும் எமது நலன்களையும் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் நாம் எடுப்போம்” என பாதுகாப்பு அமைச்சு தெளிவுபடுத்தியுள்ளது.
