பிரிவினையை முறியடித்து இலங்கையராய் எழுந்த நாடு… தெற்காசிய மெய்வல்லுநர் போட்டியில் இலங்கைக்கு இரண்டாவது இடம்… – Lanka Truth | தமிழ்

இந்தியாவில் நடைபெற்ற 4 ஆவது தெற்காசிய மெய்வல்லுநர் போட்டியில் போட்டியில் இலங்கை மெய்வல்லுநர் அணி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளது.

16 தங்கம், 14 வெள்ளி, 10 வெண்கலப் பதக்கங்களை சுவீகரித்து இந்த வெற்றியை பதிவு செய்துள்ளது.

சிங்களவர், இலங்கைத் தமிழர், மலையகத் தமிழர், முஸ்லிம் என்ற பேதமின்றி எல்லா வீரர்களும் இலங்கையராய் இணைந்து இந்த வெற்றியை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்தனர்.

தெற்காசிய மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் இலங்கையின் ஈட்டி எறிதல் வீரர் ருமேஷ் தரங்க பத்திரகே அதிசிறந்த மெய்வல்லுநருக்கான விருதை வென்றெடுத்தார்.

அத்துடன் பாத்திமா ஷபியா யாமிக் 100 மீற்றர், 200 மீற்றர், 4 x 100 மீற்றர் ஆகிய 3 போட்டிகளில் புதிய போட்டி சாதனைகளுடன் தங்கப் பதக்கங்களை சுவீகரித்திருந்தார்.

ஆண்களுக்கான 5000 மீற்றர் ஓட்டப் போட்டியில் மலையக வீரர் விக்னராஜ் வக்ஷன் வெள்ளிப் பதக்கத்தையும் குண்டு எறிதல் போட்டியில் யாழ். பருத்தித்துறை வீரர் சுசீந்திரகுமார் மிதுன்ராஜ் வெண்கலப் பதக்கமும் வென்றனர்.

நேற்று (29) நாடு திரும்பிய வீரர்களை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உட்பட அமைச்சு அதிகாரிகள் விமான நிலையத்தில் வைத்து வரவேற்றனர்.


0

நன்றி

Leave a Reply