முதல் சோதனைப் பறப்பை வெற்றிகரமாக நடத்திய, இலங்கை விமானப்படை

இலங்கை விமானப்படை, தனது மேம்படுத்தப்பட்ட கிஃபிர் சி12 ரகப் போர் விமானத்தின் முதல் சோதனைப் பறப்பை கட்டுநாயக்க இலங்கை விமானப்படைத் தளத்தில் வெற்றிகரமாக நடத்தியது. இது நாட்டின் போர் விமானக் குழுமத்தை நவீனமயமாக்குவதில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கிறது.

இலங்கையின் வான் பாதுகாப்புத் தயார்நிலைக்கும் செயல்பாட்டுத் திறனுக்கும் ஒரு பெரும் உந்துதலாக அமைகிறது. இந்தத் திட்டம், புகழ்பெற்ற இந்த விமானங்களின் சேவைக்காலத்தையும் நீட்டித்து, அவை வரும் ஆண்டுகளில் இலங்கை விமானப்படையின் ஒரு முக்கிய அங்கமாகத் தொடர்வதை உறுதி செய்கிறது.

இவ்வாறு இலங்கை விமானப்படை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

நன்றி

Leave a Reply