வீடு முற்றுகை!

வீடு முற்றுகை
யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் சொத்து குவித்தார் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் நபர் ஒருவரின் வீட்டில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (07.12.25)  சோதனை நடத்தப்பட்டது.
யாழ்ப்பாணம் பண்ணை பகுதியில் உள்ள வீட்டிலேயே காவற்துறை  மற்றும் விசேட அதிரடிப் படையினர் சுற்றி வளைப்பை மேற்கொண்டனர்.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் காவற்துறையினரால் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல் அனுமதிக்கமைய குறித்த சோதனை நடத்தப்பட்டது.
சட்டவிரோதமாகச் சொத்துச் சேர்த்த சிலருக்கு எதிராக, யாழ்ப்பாணம் குற்றத்தடுப்புப் பிரிவு காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்து வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இதனொரு கட்டமாக குறித்த நபரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

The post வீடு முற்றுகை! appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply