வென்னப்புவ சட்டவிரோத மதுபான விவகாரம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை!

புத்தளம், வென்னப்புவ பொலிஸ் பிரிவில் சட்டவிரோத மதுபானம் அருந்தியதால் ஆறு பேர் உயிரிழந்து, எட்டு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட துயர சம்பவம் குறித்து பொலிஸார் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொலிஸாரின் கூற்றுப்படி, இந்த சம்பவம் 2026 ஜனவரி 6 அன்று வென்னப்புவ பொலிஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் நடந்தது.

பாதிக்கப்பட்டவர்கள் சட்டவிரோதமாக காய்ச்சிய மதுபானத்தை உட்கொண்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்ச்சியான விசாரணையின் ஒரு பகுதியாக, சட்டவிரோத மதுபான வர்த்தகத்தில் ஈடுபட்ட இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு ஜனவரி 7 ஆம் திகதி மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இதன்போது, இரு சந்தேக நபர்களையும் ஜனவரி 19 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

மேலும், விசாரணையின் ஒரு முன்னேற்றமாக, சட்டவிரோத மதுபான விற்பனையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேக நபரான கிழக்கு பண்டிருப்புவ, கலவத்தையைச் சேர்ந்த 47 வயதுடைய நபர் ஜனவரி 7 ஆம் திகதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

ஜனவரி 8 ஆம் திகதி அவர் மாரவில நீதிவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து மேலும் விசாரணைக்காக இரண்டு நாள் தடுப்புக்காவல் உத்தரவு பெறப்பட்டது.

மேலும் சந்தேக நபர்களை அடையாளம் காணவும், இறப்புகளுக்கு வழிவகுத்த சட்டவிரோத மதுபானத்தின் சரியான கலவையைக் கண்டறியவும் விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நன்றி

Leave a Reply