மகளிர் இட ஒதுக்கீடு சட்டமூலத்துக்கு அண்ணாமலை ஆதரவு!

மகளிர் இட ஒதுக்கீடு சட்டமூலமானது தற்போதுள்ள பிராந்தியப் பங்கீட்டை மாற்றாமல் நாடாளுமன்றத்தில் மேம்பட்ட பிரதிநிதித்துவத்தை உறுதி செய்யும்.

இதன்மூலம் தமிழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 39-லிருந்து 59 ஆக உயரும், இது நேரடியான 50 சதவீத உயர்வு என்று தமிழக பாரதிய ஜனதா கட்சியின் (பாஜக) முன்னாள் தலைவர் கே. அண்ணாமலை தெரிவித்தார்.

இந்த சட்டமூலம் அமுல்படுத்தப்பட்ட பின்னரும், மக்களவையில் தென்னிந்தியாவின் பங்கு 21.9 சதவீதமாக மாற்றமின்றி நீடிக்கும் என்று அவர் கூறினார். 

வேடசந்தூர் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பரமசிவத்திற்கு ஆதரவாக மதுரையில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் இன்று உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

இந்த சட்டமூலத்துக்கு முன்பு, 543 நாடாளுமன்ற உறுப்பினர்களில் தென்னிந்தியாவின் பங்கு 21.9% ஆக இருந்தது. 

இந்த சட்டமூலத்துக்குப் பிறகும் தென்னிந்தியாவின் பங்கு அதே 21.9% ஆகவே இருக்கும். 

யாரும் குறைக்கப்படவோ அல்லது பாதிக்கப்படவோ இல்லை – மாறாக, அனைவரும் அதிக எண்ணிக்கையில் நாடாளுமன்றத்திற்குள் கொண்டுவரப்படுகிறார்கள் என்றும் அவர் இங்கு கூறினார்.

 

நன்றி

Leave a Reply