மீகொடவில் கார் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு

கொழும்பின் புறநகரான மீகொட பகுதியில் தன்சல் ஒன்றுக்கு வரிசையில் நின்றுகொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் படுகாயமைடந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (31) நள்ளிரவு வேளை இடம்பெற்றுள்ளது.

உயிரிழந்தவர்களில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள், ஒரு தம்பதியினர் மற்றும் மேலும் இரண்டு பெண்கள் ஆவர்.

விபத்தில் காயமடைந்த மேலும் 7 பேர் ஹோமாகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிலியந்தலவைச் சேர்ந்த 42 வயதான வாடகை கார் சாரதி விபத்து நடந்த நேரத்தில் மது போதையில் இருந்ததாகக் கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விபத்தை ஏற்படுத்திய, கார் சாரதி அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மீகொட பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post மீகொடவில் கார் மோதியதில் 6 பேர் உயிரிழப்பு appeared first on LNW Tamil.

நன்றி

Leave a Reply