மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகமாகப் பணியாற்றும் கமல் அமரசிங்க, எதிர்வரும் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குருநாகல் பிலஸ்ஸ நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
கெப் ரக வாகனமொன்றின் சேஸி இலக்கத்தைத் திருத்தி, அதனை போலியாகப் பதிவு செய்வதற்கு உதவி மற்றும் உடந்தையாக இருந்ததாகக் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பில், நேற்று (27) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி விசாரணைப் பிரிவினரால் அவர் கைது செய்யப்பட்டார்.
The post மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகத்துக்கு விளக்கமறியல் appeared first on Oruvan.com.
