ராஜாங்கனே சத்தாரதன தேரர் மீது தாக்குதல்

பிக்குத் துறவியிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனே சத்தாரதன என அழைக்கப்படும் தேரர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முகமூடி அணிந்த இருவர் நேற்று (13) இரவு வேன் வாகனத்தில் வந்து இந்தத் தாக்குதலை மேற்கொண்டதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தச் சம்பவத்தில் காயமடைந்த அவர் தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

தாக்குதலுக்கான காரணம் அல்லது அதனுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை என கூறப்படுகிறது.

சம்பவம் தொடர்பாக பொலிஸார் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், தாக்குதலில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தப்பிச் சென்ற சந்தேகநபர்களை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மேலும் தெரிவிக்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply