ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து இலங்கைக்கு 200 மில்லியன் டொலர் உடனடி நிதியுதவி

ஆசிய அபிவிருத்தி வங்கியினால் இந்த ஆண்டிற்காக இலங்கைக்கு அங்கீகரிக்கப்பட்டிருந்த 380 மில்லியன் டொலர் நிதியுதவியை480 மில்லியன் டொலராக அதிகரிப்பதற்கும், நிலவும் சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு அதில் 200 மில்லியன் டொலரை உடனடியாக இலங்கைக்கு வழங்குவதற்கும் ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு…

ஜனாதிபதிக்கென ஒதுக்கப்பட்டிருந்த விசேட அறை, இன்றுமுதல் மக்களின் பாவனைக்கு

இதுவரை காலம் நிறைவேற்று அதிகாரங்கொண்ட ஜனாதிபதியின் விசேட பயன்பாட்டிற்காக மாத்திரம் ஒதுக்கப்பட்டிருந்த ஸ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையின் விசேட அறை, இன்று (24) முதல் மக்களின் மருத்துவ சிகிச்சை நடவடிக்கைகளுக்காக திறக்கப்பட்டது. ஜனாதிபதி அநுரகுமாரவினால் வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய, சுகாதார அமைச்சு,…

முதலீட்டாளர்களை வடக்கு நோக்கி ஈர்ப்பதற்குத் அதிகாரத்துவ நடைமுறைகள் தடையாகவுள்ளது

இலங்கைக்கான ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க்-அண்ட்ரூ பிரஞ்ச் மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் ஆகியோருக்கிடையிலான விசேட உயர்மட்டக் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இக் கலந்துரையாடலில், வடக்கில் கடந்த காலப் போர்ச் சூழல் காரணமாகப்…

400 பாடசாலைகளுக்குத் தரமான விளையாட்டு மைதானங்களை அமைக்க அமைச்சரவை அனுமதி

விளையாட்டுகளில் மாணவர்களின் பங்கேற்பை அதிகரிப்பதையும், உடல், சமூக மற்றும் மன நலனை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு, நாடு முழுவதும் உள்ள அரசாங்கப் பாடசாலைகளில் விளையாட்டு மைதானங்களை மேம்படுத்துவதற்கான திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது. தேர்வை மையமாகக் கொண்ட கல்வி முறையும், போதுமான வசதிகள்…

ஈரானியர்களின் உயிரிழப்புக்கு இலங்கை அரசாங்கமும் பொறுப்பேற்க வேண்டும் – இம்ரான் Mp

உத்தியோகபூர்வ அழைப்பின் பேரில்,  இலங்கையை நோக்கி வந்த ஈரானியக் கப்பலான ‘ஐ.ஆர்.ஐ.எஸ் டெனா’ மீது அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தியுள்ளதாக ஈரானிய தூதுவர் தெரிவித்துள்ளார். இத் தகவல் அதிர்ச்சியளிப்பதோடு, இலங்கையின் தேசிய பாதுகாப்பையும் இறைமையையும் பாரிய கேள்விக்குறியாக்கியுள்ளதாக  இம்ரான் மகரூப்…

யாழில். எரிபொருள் விநியோகம் தொடர்பில் விசேட கலந்துரையாடல்

யாழ்ப்பாணத்தில் சீரான எரிபொருள் விநியோகம் தொடர்பாக பிரதேச செயலாளர்களுடனான கலந்துரையாடல் யாழ் மாவட்ட செயலர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை மாவட்ட செயலக அலுவலகத்தில் நடைபெற்றது. இக் கலந்துரையாடலில் யாழ்ப்பாண மாவட்டத்தில்  சீரான எரிபொருள் விநியோகமானது சகல பிரதேச…

மின் பாவனையை குறைக்கவும் – LNW Tamil

முன்னர் மின்வெட்டு நிலைகளை இந்த நாட்டின் மக்கள் அனுபவித்துள்ளதால், அந்த காலங்களில் பயன்படுத்திய சாதனங்களையே மீண்டும் பயன்படுத்தி, மின்சார அமைப்பு அதிக சுமையை சந்திக்கும் நேரங்களில் மின்சார பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று தொழில் மற்றும்…

இனி “கண்ணுக்குக் கண்” என்பதாக இருக்காது. அது “கண்ணுக்குத் தலை” என்பதாக இருக்கும்.

நீங்கள் எங்கள் உள்கட்டமைப்பைத் தாக்கினால், அது இனி “கண்ணுக்குக் கண்” என்பதாக இருக்காது. அது “கண்ணுக்குத் தலை” என்பதாக இருக்கும்.  நீங்கள் முடக்கப்படுவீர்கள். அனைத்து சேதங்களுக்கும் இழப்பீடு வழங்கப்படும் வரையிலும், அனைத்துப் பொருளாதாரத் தடைகளும் நீக்கப்படும் வரையிலும், ஈரானின் விவகாரங்களில் அமெரிக்கா…

இஸ்தான்புல் வீதி விபத்தில் மூன்று சுவிற்சர்லாந்து வாழ்  இலங்கையர்கள் பலி

  துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இடம்பெற்ற சோகமான வீதி விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், அவர்கள் மூவரும் சுவிற்சர்லாந்தில் வசித்து வந்த இலங்கையர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களில் சுவிற்சர்லாந்தின் ஆர்கவ் மாநிலத்தில் வசித்து வந்த ஜெயநந்தினி கணேசலிங்கம் (60), அவரது மகன் விபூசன்…

இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் அதிகரிப்பு

பேருந்து கட்டணத் திருத்தம் தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட முன்மொழிவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (23) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் பேருந்து கட்டணங்கள் 12.19 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளன. தற்போது 27 ரூபாவாக காணப்பட்ட குறைந்தபட்ச பேருந்து கட்டணம் 30…