யுனெஸ்கோ பாரம்பரியத் தளத்தில் சோகம்: ஹெய்தி கோட்டை திருவிழாவில் ஏற்பட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழப்பு!

ஹைத்தியில் நடந்த இந்த சம்பவம் மிகவும் துயரமானதாக உள்ளது. Laferrière Citadel பகுதியில் நடைபெற்ற ஆண்டு விழாவின் போது திடீர் நெரிசல் (stampede) ஏற்பட்டதில் குறைந்தது 30 பேர் உயிரிழந்துள்ளனர். UNESCO உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்ட இந்த இடத்தில், ஏப்ரல் 11 சனிக்கிழமை அன்று பல சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் திரண்டிருந்த  நேரத்தில் திடீரென கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

 
“மக்கள் தள்ளத் தொடங்கினர். சிலர் கீழே விழுந்தனர். பிறர் அவர்களின் மேல் மிதித்தனர்… சிலர் மூச்சுத்திணறலால் உயிரிழந்தனர்.” என அதிகாாி ஒருவா் தொிவித்துள்ளாா்.  இந்த விபத்தில் பல இளம் நபர்களும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இச்சம்பவத்தின் சரியான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது போன்ற பெரிய கூட்ட நிகழ்வுகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த சம்பவம் மீண்டும் நினைவூட்டுகிறது.

The post யுனெஸ்கோ பாரம்பரியத் தளத்தில் சோகம்: ஹெய்தி கோட்டை திருவிழாவில் ஏற்பட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழப்பு! appeared first on Global Tamil News.

நன்றி

Leave a Reply