கப்பில சந்திரசேன தற்கொல? – LNW Tamil

கப்பில சந்திரசேன “தற்கொலை செய்து கொண்டார்” என்ற தகவல்கள் சமூக ஊடகங்கள் மற்றும் சில ஊடகங்களில் பரவி வருகின்றன.

எனினும், இதுவரை அதனை இலங்கை பொலிஸார் அல்லது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியதாக நம்பகமான தகவல்கள் வெளியாகவில்லை.

ஸ்ரீலங்கா எயார்லைன்ஸ் நிறுவனத்திற்காக Airbus விமானங்கள் கொள்வனவு செய்யப்பட்ட விவகாரத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மற்றும் லஞ்ச குற்றச்சாட்டுகள் தொடர்பில் அவர் அண்மையில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். பின்னர் சில நாட்களுக்கு முன் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

மேலும், லஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணைகளின் போது தமக்கு அழுத்தங்கள் மற்றும் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டதாக அவர் நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் ஒன்றையும் தாக்கல் செய்திருந்ததாக முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

நன்றி

Leave a Reply