முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் இடம்பெற்றுள்ளனவா

இலங்கையில் நிலக்கரி மூலமான மின் உற்பத்தி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் 2026 ஏப்ரல் 16 ஆம் திகதியுடன் முடிவடைந்த காலப்பகுதிக்குள், அரசாங்கத்திற்குச் சொந்தமான லங்கா நிலக்கரி தனியார் நிறுவனம் (Lanka Coal Company (Pvt) Ltd) அல்லது அதன் வழிவந்தவர்களினால் இலங்கைக்கு நிலக்கரி இறக்குமதி செய்யப்பட்டமையிலும் மின் உற்பத்தியின் போதும் முறைகேடுகள் அல்லது சட்டவிரோதச் செயல்கள் இடம்பெற்றுள்ளனவா என்பது குறித்து ஆராய்வதற்காக ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவினால் ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 


இந்த ஆணைக்குழுவின் தலைவராக உயர்நீதிமன்ற நீதியரசர் கிகான் குலதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். அதன் உறுப்பினர்களாக மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் ஆதித்ய பட்டபெந்திகே மற்றும் மேல் நீதிமன்ற நீதியரசர் சஞ்சீவ சோமரத்ன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 


அத்துடன், ஆணைக்குழுவின் செயலாளராக முன்னாள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் பி.வி. பந்துலசேன நியமிக்கப்பட்டுள்ளார். 

நன்றி

Leave a Reply