அவதூறுகள் குறித்து, ஞானசார தேரர் CID யில் திங்கட்கிழமை (15) முறைப்பாடு செய்தார்.
முறைப்பாட்டின் பின்னர் தேரர் ஊடகங்களுக்குக் கருத்து தெரிவிக்கையில்,
நான் முதன்முறையாக இன்று CID ற்கு வந்துள்ளேன். இணைய ஊடகங்கள் வாயிலாகத் தொடர்ந்து மேற்கொள்ளப்படும் அவதூறுகளைத் தாங்கிக்கொள்ள முடியாத இடத்திலேயே, இது குறித்து விசாரணை நடத்தி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு முறைப்பாட்டைப் பொறுப்பேற்றேன். எனது முறைப்பாடு பதிவு செய்யப்பட்டு, அதற்கான ஒப்புகைச் சீட்டும் எனக்கு வழங்கப்பட்டது என்றார்

