உலகத்திடம் விடைபெறும் தருணத்திலும் தனது குழந்தையை தனியாக விடாத அம்மா

அந்த அம்மாவுக்கு தப்பிக்க வாய்ப்பு இருந்திருக்கலாம்… ஆனால் தனது குழந்தை இல்லாமல் தப்பித்து வாழ்வதற்கு என்ன அர்த்தம் என்று அவர் எண்ணியிருப்பார்… 😢

மரணத்தாலும் கூட பிரிக்க முடியாத தாய்மையின் வேதனையான காட்சி இது. மத்திய பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள பர்கி அணையில் சுற்றுலா பயணிகள் சென்ற படகு கவிழ்ந்த விபத்தில் ஒன்பது உயிர்கள் பலியானது. டெல்லியிலிருந்து வந்த அந்த குடும்பத்தின் பயணம் எதிர்பாராத துயரத்தில் முடிந்தது.

மீட்புக்குழுவினர் நீரில் இருந்து அந்த அம்மாவையும் குழந்தையையும் எடுத்தபோது, பார்த்தவர்களின் கண்களில் நீர் வரச் செய்த காட்சியாயிருந்தது அது. உயிர் பிரிந்த பின்னும் தனது குழந்தையை மார்போடு அணைத்திருந்த அந்த கைகள் தளரவில்லை. தானணிந்திருந்த லைஃப் ஜாக்கெட்டுக்குள் குழந்தைக்கு பாதுகாப்பு அளிக்க, இறுதி நொடியிலும் அந்த அம்மா போராடியிருந்தாள்.

லைஃப் ஜாக்கெட்டின் உதவியால் அந்த அம்மாவுக்கு தனியாக தப்பிக்க முடிந்திருக்கலாம். ஆனால் தனது உயிரைவிட மகனின் சுவாசத்தை மேலானதாகக் கருதிய அந்த அம்மா, மகனின்றி இருக்கும் உலகத்திற்குத் திரும்ப விரும்பியிருக்க மாட்டாள். உயிர் பிரியும் தருணத்திலும் தனது கரங்களில் இருந்த பொக்கிஷத்தை மரணத்திடம் ஒப்படைக்காமல் அவர் அணைத்துக்கொண்டிருந்தாள். மரணத்தின் குளிரிலும் அந்தக் குழந்தை தாயின் மார்பின் சூட்டை உணர்ந்திருக்கலாம்.

உலகத்திடம் விடைபெறும் தருணத்திலும் தனது குழந்தையை தனியாக விடாத அந்த அம்மாவுக்கும் குழந்தைக்கும் என் பணிவான அஞ்சலி.

நன்றி

Leave a Reply