பாலியல் தொழில் சட்டப்பூர்வமானது: காவற்துறையினர் தலையிட அதிகாரமில்லை! உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

இந்தியாவில் பாலியல் தொழில் என்பது தனிப்பட்ட முறையில் சட்டப்பூர்வமானது என்றும், பரஸ்பர விருப்பத்துடன் அதில் ஈடுபடும் வயது வந்த நபர்களை மிரட்டவோ அல்லது அவர்கள் மீது காவற்துறையினர் (Police) குற்றவியல் நடவடிக்கை எடுக்கவோ அதிகாரமில்லை என்றும் இந்திய உச்ச நீதிமன்றம் அதிரடித் தீர்ப்பளித்துள்ளது.

பாலியல் தொழிலாளர்களுக்கும் அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகளும், கண்ணியமாக வாழ்வதற்கான உரிமைகளும் சமமாகப் பொருந்தும் என நீதிமன்றம் திட்டவட்டமாகக் கூறியுள்ளது.

நீதிமன்ற உத்தரவு: நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, அரசியலமைப்பின் 142-வது பிரிவின் கீழ் உள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி இந்த வழிகாட்டுதல்களை வழங்கியது.

சட்ட வழிகாட்டுதல்: வயது வந்த ஒருவர் தனது சொந்த விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடும்போது, காவற்துறை அதில் தலையிடக் கூடாது.

பாலியல் விடுதி (Brothel) நடத்துவது, பொது இடத்தில் வாடிக்கையாளர்களை அழைப்பது மற்றும் கடத்தல் (Trafficking) போன்றவை மட்டுமே இந்தியாவில் சட்டவிரோதமானவை.

காவற்துறைக்கான கட்டுப்பாடு: பாலியல் விடுதிகள் மீது காவற்துறையினர் சோதனை நடத்தும்போது, அங்கு விருப்பத்தோடு இருக்கும் பாலியல் தொழிலாளர்களைக் கைது செய்யவோ, துன்புறுத்தவோ கூடாது.

கண்ணியமான உரிமை: பாலியல் தொழிலாளர்களோ அல்லது அவர்களின் குழந்தைகளோ எந்தவொரு வன்முறைக்கும் ஆளானால், அவர்களுக்கும் சாதாரண குடிமக்களைப் போல மருத்துவ மற்றும் சட்ட உதவிகளை காவற்துறை உடனடியாக வழங்க வேண்டும்.

இந்த உத்தரவின் மூலம் பாலியல் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் அவர்களின் பாதுகாப்பு சட்டரீதியாக உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply