‍IPL பிளேஆஃப் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி; இறுதிப் போட்டியில் RCB!

2026 இந்தியன் பிரீமியர் லீக் முதலாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி, நேற்றிரவு (26)  குஜராத் டைட்டன்ஸ் (GT) அணியை தனது அபாரமான துடுப்பாட்ட திறமையால் சிதைத்து, வரலாற்றை முற்றிலுமாக மாற்றி எழுதியது.

அணித் தலைவர் ரஜத் பட்டிதரின் அதிரடியான, ஆட்டமிழக்காத 93 ஓட்டங்கள் மற்றும் க்ருணால் பாண்டியா அடித்த விரைவான 43 ஓட்டங்களின் உதவியுடன், RCB அணி தங்களது 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 254 ஓட்டங்களை குவித்தது.

இது ஐபிஎல் பிளேஆஃப் அல்லது நாக்-அவுட் போட்டியில் எந்தவொரு அணியும் எடுத்த அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கை என்ற சாதனையாக அமைந்தது.

இந்தத் கச்சிதமான ஆட்டம், RCB அணிக்கு 92 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஒரு பிரம்மாண்டமான வெற்றியைப் பெற்றுத் தந்து.

இந்த வெற்றியின் மூலம், நடப்பு சாம்பியன்கள் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக ஐ.பி.எல். இறுதிப் போட்டிக்கு முன்னேறினர்.

அது மட்டுமல்லாமல், டி20 போட்டிகளில் நீண்ட காலமாக நிலைநாட்டப்பட்ட பல்வேறு மைல்கள் சாதனையும் RCB  தகர்த்தது.

புதிய பிளேஆஃப் சாதனை: RCB இன் 254/5 என்ற ஓட்டம், 2023-ல் குஜராத் டைட்டன்ஸ் அணி மும்பை இந்தியன்ஸுக்கு எதிராக அமைத்திருந்த முந்தைய அதிகபட்ச ஐபிஎல் பிளேஆஃப் ஓட்ட எண்ணிக்கையான 233/3-ஐ முறியடித்தது.

உலகளாவிய டி20 போட்டி: இந்த இன்னிங்ஸ், உலகளவில் எந்தவொரு டி20 நாக்-அவுட் போட்டியிலும் இதுவரை பதிவு செய்யப்பட்ட நான்காவது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையை பதிவு செய்தது.

blank

blank

போட்டி சுருக்கம் 

தர்மசாலாவில் நேற்றிரவு 07.30 மணிக்கு ஆரம்பமான இப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற GT அணியானது பந்து வீசுவதற்கு தீர்மானித்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய RCB அணியின் இன்னிங்ஸை வெங்கடேஷ் ஐயர் அதிரடியாகத் தொடங்கி வைத்தார்.

அவர் ககிசோ ரபாடாவின் பந்து வீச்சில் ஆட்டமிழப்பதற்கு முன்பு, வெறும் ஏழு பந்துகளில் மூன்று பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸருடன் 19 ஓட்டங்களை விளாசினார்.

அதன்பிறகு விராட் கோலியும் தேவ்தத் படிக்கலும் தங்களது அதிரடி ஆட்டத்தைத் தொடர்ந்தனர். 

கோலி சில நேர்த்தியான ஷாட்களை ஆட, படிக்கல் சீராக பவுண்டரிகளை விளாச, RCB பவர்பிளேயில் 76/1 என்ற ஓட்ட எண்ணிக்கையை எட்டியது; இது இந்த சீசனில் அவர்களின் சிறந்த பவர்பிளே ஓட்ட எண்ணிக்கை ஆகும்.

பின்னர் ஜேசன் ஹோல்டர், அடுத்தடுத்து இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தி குஜராத் டைட்டன்ஸ் அணியை ஆட்டத்திற்குள் மீண்டும் கொண்டு வந்தார். 

கோலி 25 பந்துகளில் 43 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார், அதேசமயம் படிக்கல் 19 பந்துகளில் 30 ஓட்டங்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

அதன்பிறகு பட்டிதரும், க்ருணால் பாண்டியாவும் இன்னிங்ஸை மீட்டெடுத்து, நடுத்தர ஓவர்களில் ஒரு வலுவான எதிர்த்தாக்குதலைத் தொடங்கினர். 

க்ருணால் பாண்டியா 28 பந்துகளில் ஐந்து பவுண்டரிகள் மற்றும் இரண்டு சிக்ஸர்கள் அடித்து, விரைவாக 43 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

மறுபக்கம் குஜராத் களத்தடுப்பாளர்களால் இரண்டு முறை பிடியெடுப்பினை தவறவிடப்பட்ட பட்டிதர் பின்னர் அதற்குப் பெரும் விலையைக் கொடுத்து, வெறும் 21 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். 

நோ-பால் மற்றும் தவறான களத்தடுப்பு மூலம் கூடுதல் ஓட்டங்களை விட்டுக்கொடுத்து, குஜராத் அணியும் களத்தில் தடுமாறியது.

பட்டிதர் இறுதிவரை தனது அபாரமான துடுப்பாட்டத்தைத் தொடர்ந்தார், மேலும் ஐந்து பவுண்டரிகள் மற்றும் ஒன்பது சிக்ஸர்களை விளாசி வெறும் 39 பந்துகளில் 93 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். 

blank

ஆட்டத்தின் பிற்பகுதியில் ஜிதேஷ் சர்மா 15 ஓட்டங்களைச் சேர்த்தார்.

இறுதியாக RCB அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 254 ஓட்டங்கள‍ை குவித்தது.

255 ஓட்டங்கள் என்ற பிரம்மாண்டமான இலக்கைத் துரத்திய GT அணி, தொடர்ச்சியாக விக்கெட்டுகளை இழந்ததால் அதிலிருந்து மீளவே முடியவில்லை. 

வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டஃபி மூன்று முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி பந்துவீச்சை சிறப்பாக வழிநடத்தினார்.

அதே நேரத்தில் புவனேஷ்வர் குமார், ரசிக் சலாம் டார் மற்றும் க்ருணால் பாண்டியா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

மூன்றாவது ஓவரில் சாய் சுதர்சன் ஜேக்கப் டஃபியின் பந்து வீச்சைத் தாக்கு துடுப்பெடுத்தாட குஜராத் அணி நம்பிக்கையுடன் ஆட்டத்தைத் தொடங்கியது. 

இருப்பினும், எதிர்பாராதவிதமாக, சாய் சுதர்சன்  ஒரு ஷாட் ஆட முயன்றபோது அவரது துடுப்பாட்ட மட்டை நழுவி, ஸ்டம்புகளில் பட்டுத் தெறித்ததால், ஒன்பது பந்துகளில் 14 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அவரது ஆட்டம் முடிவுக்கு வந்தது.

பின்னர் புவனேஷ்வர் குமார், குஜராத் அணித் தலைவர் ஷுப்மன் கில்லை வெறும் இரண்டு ஓட்டங்களுடன் ஆட்டமிழக்கச் செய்து ஒரு பெரிய அடியைக் கொடுத்தார். 

ஜோஸ் பட்லர் பதிலடி கொடுக்க முயன்று, பவுண்டரிகளையும் சிக்ஸர்களையும் விளாசினார், ஆனால் ஹேசில்வுட் உடனடியாக அந்த அபாயகரமான துடுப்பாட்ட வீரரை க்ளீன் போல்ட் முறையில் ஆட்டமிழக்கச் செய்து பதிலளித்தார். 

பட்லர் வெறும் 11 பந்துகளில் விரைவாக 29 ஓட்டங்கள் எடுத்தார்.

பவர்-பிளேயின் இறுதி ஓவரில் ரசிக் சலாம் தார், நிஷாந்த் சந்து மற்றும் ஜேசன் ஹோல்டர் ஆகியோரை ஒரே ஓவரில் ஆட்டமிழக்கச் செய்தபோது, ​​RCB தனது பிடியை மேலும் இறுக்கியது. 

மிகப்பெரிய இலக்கைத் துரத்திய GT அணி, பவர்-பிளேயின் முடிவில் 51 ஒட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

வொஷிங்டன் சுந்தரும் ராகுல் தெவாடியாவும் இன்னிங்ஸை மீண்டும் கட்டமைக்க முயன்றனர், ஆனால் டஃபி சுந்தரை எட்டு ஓட்டங்களுக்கு ஆட்டமிழக்கச் செய்தார். 

சிறிது நேரத்திலேயே அந்த நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரஷித் கானையும் ஆட்டமிழக்கச் செய்தார்.

இதனால் 11 ஓவர்களில் GT  அணி 87 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்தது. 

Image

தொடர்ந்து ககிசோ ரபாடா, க்ருணால் பாண்டியாவின் பந்து வீச்சில் லோங் – ஓனில் விராட் கோலியிடம் பிடி கொடுத்து வெளியேற நிலமை மேலும் மோசமானது.

போட்டியின் வெற்றி கிட்டத்தட்ட கைவிட்டுப் போன நிலையில், GT அணிக்காக ராகுல் தெவாடியா தனி ஒருவராகப் போராடினார். 

அந்த இடது கை ஆட்டக்காரர், விறுவிறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வெறும் 33 பந்துகளில் தனது அரைசதத்தை எட்டினார். 

எட்டு பவுண்டரிகள் மற்றும் நான்கு சிக்ஸர்களுடன் 43 பந்துகளில் 68 ஒட்டங்கள் எடுத்திருந்த அவரை, புவனேஷ்வர் ஒரு மெதுவான பந்தில் ஆட்டமிழக்கச் செய்தார்.

இறுதியாக குஜராத் டைட்டன்ஸ் அணி 19.3 ஓவர்களில் 162 ஓட்டங்களுக்குள் ஆட்டமிழந்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக ரஜத் பட்டிதர் தெரிவானார்.

இந்த வெற்றியின் மூலம் மே 31 அன்று அகமதாபாத்தில் நடைபெறவுள்ள இறுதிப் போட்டிக்கு RCB அணி தகுதி பெற்றுள்ள நிலையில், GT அணி நியூ சண்டிகருக்குச் சென்று, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதும் எலிமினேட்டர் போட்டியின் வெற்றியாளரை எதிர்கொள்ளும்.

நன்றி

Leave a Reply