நிகவெரட்டிய, கொபெய்கனே பகுதியில் தெதுறு ஓயாவில் நீராடச் சென்று உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.
மேலும் நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆறாக அதிகரித்துள்ளது.
மேலும் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு, காணாமல் போன மேலும் இருவரைத் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று (16) மதியம், 15 பேர் கொண்ட குழுவினர் தெதுறு ஓயா ஆற்றில் நீராடச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்தது.
பொலிஸாரின் கூற்றுப்படி, புத்தாண்டு விடுமுறைக்காக உறவினர்களைச் சந்திக்கச் சென்ற கடவத்தை பகுதியைச் சேர்ந்த ஏழு பேரும், கொபெய்கனே சேர்ந்த மேலும் எட்டு பேரும் அந்தக் குழுவில் இருந்துள்ளனர்.
நீராடச் சென்ற 15 பேரில் 10 பேர் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்டனர். உள்ளூர் தன்னார்வலர்களால் மீட்கப்பட்ட இருவர், கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
எனினும், ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டிருந்தனர். மீதமுள்ள ஆறு பேரைத் தேடும் பணியின்போது, பின்னர் மேலும் நால்வரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்நிலையில், காணாமல் போன இருவரைத் தேடும் பணிகள் தொடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post Views: 1
