உக்ரைன் ஜனாதிபதியால் கௌரவிக்கப்பட்ட இலங்கை வீரர் போரில் உயிரிழந்தார்

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கியால் “வீர சிப்பாய் பதக்கம்” வழங்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த லஹிரு காவிந்த ஹதுருசிங்க, உக்ரைனில் உள்ள போர்க்களத்தில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை இராணுவத்தின் இரண்டாவது கமாண்டோ படைப்பிரிவின் உயரடுக்கு பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றியபோது, ​​அப்பிரிவிற்குத் தெரிவிக்காமல் சேவையிலிருந்து…

நிதி மோசடிக்காக வந்தவர்கள் கட்டுநாயக்கவில் பிடிபட்டனர்

கணினி  நிதி மோசடிகளைச் முன்னெடுப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்த 9 சீனர்கள் இன்று (16) காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களிடமிருந்து 2 கோடியே 40 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா பெறுமதியான மின்னணுத் தொடர்பு சாதனங்களை…

9 சீனப் பிரஜைகள் கைது

இணையவழி நிதி மோசடிகளில் ஈடுபடும் நோக்குடன் இலங்கைக்கு வருகை தந்ததாகச் சந்தேகிக்கப்படும் 9 சீனப் பிரஜைகள், கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து சுமார் 24 மில்லியன் ரூபாயிற்கும் அதிக மதிப்புள்ள மின்னணுத் தகவல் தொடர்பு சாதனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இவர்கள் இலங்கையில் தங்கியிருந்து இணையம்…

ஒன்றுடன் ஒன்று மோதிய வாகனங்கள்: 10 பேர் காயம்

எஹெலியகொடை நகரில் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்த கார் ஒன்று ஏனைய வாகனங்களுடன் மோதியதில் பாரிய விபத்து ஏற்பட்டுள்ளது.  இன்று (15) இரவு 7 மணியளவில் இடம்பெற்ற இந்த விபத்தின் போது ஒரு மோட்டார் சைக்கிள், 3 முச்சக்கர வண்டிகள் மற்றும் 2…

சிறுமி துப்பிரயோகம் – அயலவர் கைது

 யாழ்ப்பாணத்தில் சிறுமியை துஸ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 38 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளார். மூளாய் – வேரம் பகுதியைச் சேர்ந்த 11 வயதுடைய குறித்த சிறுமியை அவரது வீட்டின் அருகே வசிக்கும் நபர் கடந்த சில தினங்களுக்கு முன்னர்  துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளார்.…

மத்திய கிழக்கு போர் உலகப் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும்: சர்வதேச நாணய நிதியம் எச்சரிக்கை

மத்திய கிழக்கின் போர்ச் சூழல் ஏற்கனவே உலகப் பொருளாதாரத்திற்கு ஒரு சுமையாக மாறியுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக உலகளாவிய பொருளாதார மந்தநிலை மற்றும் பொருளாதார வளர்ச்சியில் பெரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என்று அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. இந்தப்…

மன்னார் கடற்பரப்பில் கோர விபத்து: படகு மோதி மீனவர் ஒருவர் பலி; மற்றொருவர் படுகாயம்!

64 மன்னார்  கடல் பகுதியில் இன்று புதன்கிழமை அதிகாலை இடம்பெற்ற படகு விபத்தில் மீனவர் ஒருவர்  உயிரிழந்துள்ளார் . இரண்டு மீன்பிடிப் படகுகள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.மன்னார் வங்காலைப்பாடு  கடல் பகுதியில் இன்று (15) அதிகாலை 4…

வரி, வாழ்க்கைச் செலவு உயர்வால் வாடும் இலங்கையர்கள்  – மீண்டும் வரி உயர்வுக்கான சாத்தியக் கூறுகள் 

இலங்கை தற்போது எதிர்கொண்டுவரும் சமூக மற்றும் பொருளாதார பிரச்சினைகளில் பிரதானமானவையாக வரி உயர்வு மற்றும் வாழ்க்கைச் செலவு உயர்வு என்பன காணப்படுகின்றன. கடந்த சில ஆண்டுகளாக இலங்கை எதிர்கொண்டுவரும் கடுமையான பொருளாதார நெருக்கடியின் பின்னணியில், சமகால அரசாங்கம் மேற்கொண்டுள்ள பொருளாதார சீர்திருத்த…

CTB பேருந்துகளினால் கொட்டிய வருமானம்

சித்திரை புத்தாண்டு காலப்பகுதியில் இலங்கை போக்குவரத்துச் சபை முன்னெடுத்த விசேட போக்குவரத்து சேவைகள் மற்றும் அதன் மூலம் ஈட்டப்பட்ட வருமானம் குறித்து சபையின் தலைவர் சஜீவ நந்தன கனகரத்ன முக்கிய தகவல்களை வெளியிட்டுள்ளார். கடந்த 6 நாட்களில் மாத்திரம் இலங்கை போக்குவரத்துச்…

கொழும்புக்கு திரும்பும் மக்களுக்காக விசேட போக்குவரத்து

சித்திரை புத்தாண்டுக்காக சொந்த ஊர்களுக்கு சென்று மீண்டும் கொழும்புக்கு திரும்பும் பயணிகளின் தேவையைக் கருத்திற்கொண்டு, இன்று (15) முதல் பஸ்களைச் சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அனைத்து மாகாண போக்குவரத்து அதிகார சபைகளுக்கும் இதற்கான அறிவுறுத்தல்கள்…